Sunday, January 15, 2012

Kavitha Kumar - 2

கவிதா : எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு ..
குமார் : உனக்கு இல்லாததா .. என்ன வேணும் ?
கவிதா : என்கிட்டே எப்பவும் பொய் சொல்ல மாட்டேன்னு..
குமார் : சத்தியம் !
கவிதா : இல்ல .. உன்கிட்ட சத்தியமா பொய் சொல்ல மாட்டேன்னு சொல்லு ...
குமார் : அதான் சொன்னேனே ?!!
கவிதா : இல்ல .." பொய் சொல்ல மாட்டேன்னு நீ " சத்தியம் பண்ணல..
குமார் : சரி, சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் .. போதுமா ?
கவிதா : இல்ல ..நீ " என்கிட்டே " பொய் சொல்ல மாட்டேன்னு சத்தியம் பண்ணு ...
குமார் : உன்கிட்ட இனிமே சத்தியமா பொய் சொல்ல மாட்டேன் ! சதோஷமா ?!
கவிதா : சரி. குடுத்தா சத்தியத்த நீ காப்பாத்துவேன்னு எப்படி நம்புறது ?!
குமார் : [சபா..... இப்பவே கண்ண கட்டுதே ! ]
குமார் : [சத்தியம் பண்ண வரைக்கும் நான் பொய் சொல்லல.. நான் சொல்ற மொத பொய்யே இது தான் !!!]

No comments:

Post a Comment