Friday, March 30, 2012

உனக்கு புரிந்தால் போதும்,
பின்னர் நீ மறந்தால் போதும்,
உனக்கு மட்டுமே தெரியும்,
உன் மனது மட்டுமே அறியும்,
தெரியாமல் சென்று விட்டேன்,
காதல் மறுத்து சென்று விட்டேன்,
சொன்னவள் உன் தோழி,
தொலைந்ததோ என் நாழி,
உன்னால் மறக்கவும் முடியும்,
உன்னால் மறுக்கவும் முடியும்,
மறுத்த பின்னே மறந்து போ,
மறந்த பின்னே பறந்து போ...
கண்ணதாசன் சொல்லிவிட்டான்,
சொன்னதோடு சென்று விட்டான்..
" நான் பார்த்ததிலே, அவள்
ஒருத்தியைதான்
நல்ல அழகி என்பேன்,
நல்ல அழகி என்பேன் "...
ஊதா வும் பச்சையுமாக அவள்,
என் பள்ளி பருவத்திலே அவள்,
நான் பார்த்தது அவளை மட்டுமே,
என் முதல் காதலும் அவள் மட்டுமே,
திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,
அவளுக்கு கேட்க விருப்பம் இருந்தால்,
சொல்லிவிடுவேன் ஒரே ஒரு முறை,
சொல்லாமல் விட்டது எனது குறை,
சொல்லாமல் விட்ட காதலும்
ஒரே ஒரு முறை சொக்க வைத்த காதலியும்,
வருவது ஒரு முறை மட்டுமே !
கிடைக்குமா அந்த நிமிடம் ?
நிரம்புமா அந்த இடம் ?
முதல் முதல் காதல்
முதல் முதல் காதலி
காதல் என்று தெரியாமலே
காம நெருப்பு எறியாமலே..
தினமும் பார்க்க தோன்றும்,
திரும்பியும் செல்ல தோன்றும்,
கடிதம் எழுதி கிழித்து விட்டேன்,
ஆனால், காதலி மிக்க அருகிலே,
காதலோ இலையின் சருகிலே,
நிலைக்குமா தெரியவில்லை,
எதுவுமே புரியவில்லை,
ஆனால்,
காதல் மட்டும் இருந்தது,
இருந்தது காதல் மட்டுமே !