கிடைக்குமா அந்த நிமிடம் ?
நிரம்புமா அந்த இடம் ?
முதல் முதல் காதல்
முதல் முதல் காதலி
காதல் என்று தெரியாமலே
காம நெருப்பு எறியாமலே..
தினமும் பார்க்க தோன்றும்,
திரும்பியும் செல்ல தோன்றும்,
கடிதம் எழுதி கிழித்து விட்டேன்,
ஆனால், காதலி மிக்க அருகிலே,
காதலோ இலையின் சருகிலே,
நிலைக்குமா தெரியவில்லை,
எதுவுமே புரியவில்லை,
ஆனால்,
காதல் மட்டும் இருந்தது,
இருந்தது காதல் மட்டுமே !
No comments:
Post a Comment