கண்ணதாசன் சொல்லிவிட்டான்,
சொன்னதோடு சென்று விட்டான்..
" நான் பார்த்ததிலே, அவள்
ஒருத்தியைதான்
நல்ல அழகி என்பேன்,
நல்ல அழகி என்பேன் "...
ஊதா வும் பச்சையுமாக அவள்,
என் பள்ளி பருவத்திலே அவள்,
நான் பார்த்தது அவளை மட்டுமே,
என் முதல் காதலும் அவள் மட்டுமே,
திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,
அவளுக்கு கேட்க விருப்பம் இருந்தால்,
சொல்லிவிடுவேன் ஒரே ஒரு முறை,
சொல்லாமல் விட்டது எனது குறை,
சொல்லாமல் விட்ட காதலும்
ஒரே ஒரு முறை சொக்க வைத்த காதலியும்,
வருவது ஒரு முறை மட்டுமே !
No comments:
Post a Comment