Saturday, September 17, 2011

காதலித்து பார் !

காதலித்து பார் ...
எதிரியும் நண்பனாவான்,
ஏமாளியும் கொம்பனாவான்,
ஊரெல்லாம் இருண்டு போகும்,
தெரிந்த பாதை மறந்து போகும்,
கலர் சோடா கசந்து போகும்,
பஞ்சு மெத்தை மிகவும் நோகும்,
பூ இல்லாத நாறும் மணக்கும்,
புரியாது வாயிப்பாடும் கணக்கும்,
வெட்கமெல்லாம் பறந்து போகும்,
வேதனை எல்லாம் மறந்து போகும்,
சோறு தண்ணீர் இறங்க மறுக்கும்,
பசியும் தாகமும் மிக்க சிறுக்கும்,
காதலித்து பார் !

No comments:

Post a Comment