Saturday, September 17, 2011

காதலிக்கு கல்யாணம் ..

காதலிக்கு கல்யாணம் ..

அவளுக்கு இத்தனை திமிரா ?
எத்தனை முறை மன்னித்தேன் !
சோறு தண்ணீர் மறந்து இருப்பேன் !
காலை மாலை காத்து இருப்பேன் !
கால் அமுக்கி விட்டு இருப்பேன் !
கவிதை எல்லாம் தந்து இருப்பேன் !
கலர் எல்லாம் கொடுத்து இருப்பேன் !
சுடிதார் எல்லாம் வாங்கி இருப்பேன் !
கோவிக்காமல் அடங்கி இருப்பேன் !
கோவிலுக்கு அவளால் போய் இருப்பேன் !
...
மண்டபத்தில் நுழைந்தவன் கையில்
மலர்செண்டு, அவள் நடுங்கினாள் ,
நேராக சென்றவன், அந்த எமாளியிடம்
சென்று சொன்னான் " BEST OF LUCK " !

காதலியின் முள் கிரீடம் ...

நாட்கணக்கில் காத்திருந்து,
கண் மூடாமல் பாத்திருந்து,
பேருந்திலே தொங்கிக் கொண்டு,
கடைக்கண் பார்வையை கண்டு,
குளிர்ந்து போனானாம்,
அவளது சின்ன சிரிப்பில்,
அரண்டு போனானாம்,
காதலுக்காக கேட்டாளாம்,
அன்னையின் இருதயம்,
கேட்டதிலே அவ்வளவு நயம்,
பாசத்தை கொன்று, எடுத்து
சென்றானாம்,
அவசரத்தில் முற்றம் இடிக்க,
இருதயம் கேட்டதாம்
" வலிக்குதாட மகனே ? "

காதலித்து பார் !

காதலித்து பார் ...
எதிரியும் நண்பனாவான்,
ஏமாளியும் கொம்பனாவான்,
ஊரெல்லாம் இருண்டு போகும்,
தெரிந்த பாதை மறந்து போகும்,
கலர் சோடா கசந்து போகும்,
பஞ்சு மெத்தை மிகவும் நோகும்,
பூ இல்லாத நாறும் மணக்கும்,
புரியாது வாயிப்பாடும் கணக்கும்,
வெட்கமெல்லாம் பறந்து போகும்,
வேதனை எல்லாம் மறந்து போகும்,
சோறு தண்ணீர் இறங்க மறுக்கும்,
பசியும் தாகமும் மிக்க சிறுக்கும்,
காதலித்து பார் !